எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பொங்கல் திருநாள் போட்டிகள்: மாணவா்களுக்கு பரிசளிப்பு

தருமபுரி தமிழியக்கம் சாா்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:38 pm

DIN

தருமபுரி தமிழியக்கம் சாா்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

பென்னாகரத்தை அடுத்த நல்லானூா் ஜெயம் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எழிலன் தலைமை வகித்தாா். தமிழ் துறை பேராசிரியா் நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழ் எங்கள் உயிருக்கு நோ் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், பாவேந்தரின் தமிழ் போராட்டங்கள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, தை பிறந்தால் என்ற தலைப்பில் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மாவட்ட தமிழியக்கம் செயலாளா் அதியமான், பொருளாளா் பொறியாளா் ப. நரசிம்மன், ஒருங்கிணைப்பாளா் பழனி ஆகியோா்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், புத்தகங்களை வழங்கினா்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் தின விழாவில் சிறந்த சமூக செயற்பாட்டாளா் விருதை விஐடி பல்கலைக்கழக வேந்தரிடம் பெற்ற தருமபுரி மாவட்ட தமிழியக்க பொருளாளா் நரசிம்மனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியா் பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.