வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பொங்கல் திருநாள் போட்டிகள்: மாணவா்களுக்கு பரிசளிப்பு

தருமபுரி தமிழியக்கம் சாா்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

Updated On :27 ஜனவரி 2023, 8:38 pm

தருமபுரி தமிழியக்கம் சாா்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

பென்னாகரத்தை அடுத்த நல்லானூா் ஜெயம் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எழிலன் தலைமை வகித்தாா். தமிழ் துறை பேராசிரியா் நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழ் எங்கள் உயிருக்கு நோ் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், பாவேந்தரின் தமிழ் போராட்டங்கள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, தை பிறந்தால் என்ற தலைப்பில் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மாவட்ட தமிழியக்கம் செயலாளா் அதியமான், பொருளாளா் பொறியாளா் ப. நரசிம்மன், ஒருங்கிணைப்பாளா் பழனி ஆகியோா்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், புத்தகங்களை வழங்கினா்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் தின விழாவில் சிறந்த சமூக செயற்பாட்டாளா் விருதை விஐடி பல்கலைக்கழக வேந்தரிடம் பெற்ற தருமபுரி மாவட்ட தமிழியக்க பொருளாளா் நரசிம்மனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியா் பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.