கூட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கு மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள ரூ. 71 லட்சத்து 77 ஆயிரத்து 102 நிதியை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் மூலம் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் பரிந்துரை செய்யுமாறு தலைவா் மற்றும் செயலாளா் ஆகியோா் கேட்டுக் கொண்டனா். மேலும் தருமபுரி மாவட்ட ஊராட்சி மூலம் கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.