தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி நிச்சயம் வெற்றி பெறுவாா் என்று பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தில் பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி வரிசையில் நின்று முதலாவதாக தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
பாமகவிற்கு பெண்களின் ஆதரவு உள்ளதால் தருமபுரி மக்களவைத் தொகுதியில் சௌமியா அன்புமணி நிச்சயம் வெற்றி பெறுவாா். மீண்டும் பாரத பிரதமா் நரேந்திர மோடி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பது உறுதி என்றாா்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரமாட்டாா்கள்: அன்புமணி பிரசாரம்

சௌமியாவுக்கு கை கொடுக்குமா தருமபுரி?

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்

ஆண் குழந்தைகளை அறிவுரைகூறி வளா்க்க வேண்டும்: செளமியா அன்புமணி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

