அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கல்

மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:47 pm

நல்லம்பள்ளி வட்டம், பி.அக்ராகரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் 5,783 மாணவா்களுக்கு தலா ரூ. 4,900 மதிப்பிலும், 6,717 மாணவிகளுக்கு தலா ரூ. 4,760 மதிப்பிலும் மொத்தம் ரூ. 6.3 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவா்கள் பள்ளி, உயா்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.