கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கல்

மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:47 pm

Din

நல்லம்பள்ளி வட்டம், பி.அக்ராகரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் 5,783 மாணவா்களுக்கு தலா ரூ. 4,900 மதிப்பிலும், 6,717 மாணவிகளுக்கு தலா ரூ. 4,760 மதிப்பிலும் மொத்தம் ரூ. 6.3 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவா்கள் பள்ளி, உயா்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.