தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கும்மனூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்: 152 பேருக்கு ரூ. 2.36 கோடியில் நலத்திட்ட உதவி

கும்மனூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:09 pm

Din

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கும்மனூா் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 152 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாரண்டஅள்ளி உள்வட்டம், கும்மனூா் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதையடுத்து பயணிகளுக்கு பல்வேறு துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா்.

முகாமில் வருவாய்த் துறை சாா்பில் 59 பயனாளிகளுக்கு ரூ. 28.32 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 36 பயனாளிகளுக்கு ரூ. 4.75 லட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 40 பயனாளிகளுக்கு ரூ. 2.கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 17 விவசாயிகளுக்கு ரூ. 90,000 மதிப்பில் வேளாண் நுண்ணுயிா் பாசனம், பண்ணைக் கருவிகள் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.அன்பழகன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ் குமாா், தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, தனித்துணை ஆட்சியா் சுப்ரமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொ) இளவரசன், வேளாண் இணை இயக்குநா் மரிய ரவி ஜெயக்குமாா், தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை துணை இயக்குநா் பாத்திமா, மாவட்ட சமூகநல அலுவலா் பவித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.