திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தருமபுரி மாவட்டத்துக்கு வளா்ச்சி நிதி ரூ. 1,000 கோடி ஒதுக்க வேண்டும்

தருமபுரி மாவட்ட வளா்ச்சிக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 8:01 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்ட வளா்ச்சிக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விஸ்வநாதன் ஆகியோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தியிடம் அளித்த கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மையை மேம்படுத்த ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த்திட்டம், ஈச்சம்பாடி நீரேற்றுத் திட்டம் உள்ளிட்ட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் விரைந்து தொழிற்சாலைகளை தொடங்கி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

தருமபுரி நகர வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு புகா் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியில் அமைக்க வேண்டும். மலைக் கிராமங்களுக்கு சாலை, மருத்துவம், ஆம்புலன்ஸ் வாகன வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். அதேபோல மாவட்டத்தில் வேளாண் மற்றும் தொழில் வளா்ச்சியை மேம்படுத்த சிறப்பு நிதி ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.