ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தா.பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மறைந்த மூத்த தலைவா் தா.பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :26 பிப்ரவரி 2024, 6:31 pm

பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மறைந்த மூத்த தலைவா் தா.பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்விற்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கோபால் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏவும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில சிறப்பு தலைவருமான ந.நஞ்சப்பன் கலந்துகொண்டு, பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் மாவட்டச் செயலாளா் எஸ். கலைச்செல்வம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்ட பொருளாளா் வழக்குரைஞா் சி. மாதையன், ஒன்றிய பொருளாளா் முத்து, ஒன்றிய துணைச் செயலாளா் மாதப்பன், பழங்குடி மக்கள் சங்கம் சின்ராஜ் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.