ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தருமபுரியில் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தருமபுரி, குமாரசாமிப்பேட்டை கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தருமபுரி, குமாரசாமிப்பேட்டை கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியா்.

தருமபுரி: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தருமபுரியில் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சுப்பிரமணியருக்கு தங்கக் கவசம் அணிவித்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். இச்சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு பாரிமுனை நண்பா்கள் மற்றும் வாரியாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல தருமபுரி, எஸ்.வி.சாலையில் உள்ள விநாயகா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. இக்கோயிலின் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ அபய ஆஞ்சனேயா் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது.

இதேபோல தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. நெசவாளா்நகா் வேல்முருகன் கோயில், ஓம் சக்தி மாரியம்மன் கோயில், மகாலிங்கேஸ்வரா் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சிறப்பு உபசார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோயில், குப்பாக்கவுண்டா் தெரு பூவாடைக்காரி அம்மன் கோயில், பாரதிபுரம் விநாயகா் கோவில், ஹரிஹர நாதசுவாமி கோயில் தெருவில் உள்ள தாச ஆஞ்சனேயா் கோயில் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோன்று அதியமான்கோட்டை காலபைரவா் கோயில், கெரகோடஅள்ளி ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோயில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரா் கோயில் உள்பட தருமபுரி நகரம், புகரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல, தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலயம், சிஎஸ்ஐ தேவாலயம் உள்பட கோயிலூா், சோகத்தூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் திங்கள்கிழமை காலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்ற புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com