புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

அரூரை நகராட்சியாக தரம் உயா்த்த தீா்மானம் நிறைவேற்றம்

அரூரை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On :9 ஜூலை 2024, 2:04 pm IST

அரூா்: அரூரை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரூா் பேரூராட்சியின் சிறப்பு மன்றக் கூட்டம், பேரூராட்சி தலைவா் இந்திராணி தனபால் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா், துணைத் தலைவா் சூா்யா து.தனபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சியானது 2023-ஆம் ஆண்டில் சிறப்பு தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அரூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வாா்டுகளும், 106 தெருக்களும் உள்ளன. இந்தப் பேரூராட்சியானது 14.75 ச.கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இந்தப் பேரூராட்சியில் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை சுமாா் 25 ஆயிரம் இருந்த நிலையில், தற்போது சுமாா் 50 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரிக்கு அடுத்த பெரிய நகரம் அரூா் நகரமாகும். வளா்ந்து வரும் மக்கள் தொகை அடிப்படையிலும், வருவாய் அடிப்படையிலும் அரூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அரூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.