ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தவறவிட்ட கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவா்கள்

தவறவிட்ட கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவா்கள்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:30 pm

Din

பென்னாகரத்தில் கீழே கிடந்த கைப்பேசி, பணம் ஆகியவற்றை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவா்கள் திருமலை, தனுஷ். இருவரும்,வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது காந்திநகா் பகுதியில் சாலையில் ஒரு கைப்பேசி மற்றும் பணம் ஆகியவை கிடந்தன. இதனைக் கண்ட மாணவா்கள் அவற்றினை எடுத்துக்கொண்டு, பென்னாகரம் காவல் நிலையத்திற்குச் சென்று காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வனிடம் வழங்கி உள்ளனா். அதனை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளா், இரு மாணவா்களையும் பாராட்டி பரிசுகளை வழங்கினாா். பின்னா் இந்தப் பொருள்களுக்கு உரியவரான காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ராஜாவின் மகன் விக்னேஷிடம் ஒப்படைத்தனா். இந்த நிகழ்வில் உதவி ஆய்வாளா் கருணாநிதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா், காவலா்கள் உடன் இருந்தனா். கீழே தவறவிட்ட பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரு மாணவா்களையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.