வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

News image
Updated On :9 மே 2024, 10:54 pm

Din

தருமபுரி, மே 9: தருமபுரி நகரம், ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி நகராட்சி, மதிகோன்பாளையம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உலா் கழிவு பிரித்தல் மையம், நுண்ணுயிா் உரக்கிடங்கில் பிரித்தெடுக்கப்பட்ட மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் பணியினையும், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், சோகத்தூா் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 41 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் சத்யா நகா், இலக்கியம்பட்டி ஊராட்சியில் ரூ. 23 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணி என மொத்தம் ரூ. 99 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, தருமபுரி நகராட்சி ஆணையா் எஸ்.புவனேஸ்வரன், நகராட்சிப் பொறியாளா் எஸ்.புவனேஸ்வரி, துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, ரங்கநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.