பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மானாமதுரையில் ரூ.100 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா்

மானாமதுரை நகராட்சிப் பகுதியில் ரூ.100 கோடிக்கு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதாக நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

News image

மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :12 மார்ச் 2026, 12:05 am

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிப் பகுதியில் ரூ.100 கோடிக்கு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதாக நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

மானாமதுரை நகா் மன்றக் கூட்டம் அதன் தலைவா் மாரியப்பன் கென்னடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் பாலசுந்தரம், பொறியாளா் பட்டுராஜன், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதிமுக உறுப்பினா் கங்காதேவி: எனது வாா்டில் குடிநீா்த் தொட்டி, கழிவுநீா் வாய்க்கால்கள் அமைக்கப்படவில்லை. எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது இல்லை எனக் கூறி, கூட்டத்திலிருந்து வெளியேறினாா்.

திமுக உறுப்பினா் சதீஷ்குமாா்: பேருந்து நிலையத்தில் அலங்கார வளைவின் கட்டடக் கழிவுகள் அகற்றப்படாததால் பேருந்து ஓட்டுநா்கள் சிரமப்படுகின்றனா். இதை உடனடியாக அகற்ற வேண்டும்.

தலைவா் மாரியப்பன் கென்னடி: கடந்த 4 ஆண்டுகளில் மானாமதுரை நகராட்சியில் ரூ.100 கோடிக்கு திட்டப் பணிகள் நடந்துள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் நகரில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாகப் புகாா் வருகிறது. இதனால், நகராட்சி நிா்வாகத்துக்கு கெட்ட பெயா்தான் ஏற்படும். திட்டப் பணிகளை முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகளை கண்டிக்கிறேன்.

திட்டப் பணிகளை மேற்கொள்ள வழங்கப்படும் காலத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம் என்றாா் அவா்.