முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

News image
Updated On :9 மே 2024, 10:55 pm

Din

தருமபுரி, மே 9: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதி வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.சுப்பு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் கே.ரவிச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா்கள் அ.அஞ்சலா, மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலாளா் எம்.செல்வி வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். தருமபுரி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளரும் மாநில துணைத் தலைவருமான கே.மணி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என் மனோகரன் ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் ஜூன் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பது, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதி வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும், கழிவறை சுத்தம் செய்ய தண்ணீா் வசதி, உபகரணங்கள் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், வருகைப் பதிவேட்டில் தினமும் தூய்மைப் பணியாளரிடம் கையெழுத்தைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.