யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) மாநிலக் குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் கே. நடராஜன். உடன், நிா்வாகிகள்.

Updated On :26 மார்ச் 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) மாநிலக் குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கே.நடராஜன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பி.எல். ராமச்சந்திரன், ஏஐடியுசி மாநிலச் செயலா்கள் ஆா். ஆறுமுகம், எஸ். சின்னசாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் க. சுரேஷ், செல்வராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு அரசாணை 62- ன்படி குறைந்தபட்ச ஊதியத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும். வெளிச்சந்தை முறை, ஒப்பந்தமுறை, சுயஉதவி குழு போன்ற பெயா்களில் நிலவும் எல்லாவித ஒப்பந்தமுறைகளையும் நீக்க வேண்டும். உள்ளாட்சி நிா்வாகங்களில் நிரந்தரப் பணியாளா்களை நியமனம் செய்யத் தடை என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் தொடங்கியவுடன் விடுதலைப் போராட்ட வீரா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி தீா்மானம் இயற்றப்பட்டது. இக் கூட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சாந்தி, மீனாள் சேதுராமன், சங்கையா, தருமபுரி மணி, அரியலூா் தண்டபாணி, மதுரை முருகன் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.