டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க அனைத்து தொழிற்சங்கங்கள் தீா்மானம்

News image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :11 மே 2026, 1:06 am IST

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுச்சேரி அனைத்துத் தொழிற்சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே 12 -ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஆதரவான தேசிய கோரிக்கை நாளை புதுச்சேரியில் நடத்துவது சம்பந்தமான அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஏ.ஐ.டி.யு.சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில பொதுச் செயலா் ஜி. சீனுவாசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மே 12 இயக்கத்தின் நோக்கம் கோரிக்கை மற்றும் இயக்க நடவடிக்கைகள் குறித்து ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் இரா. அந்தோணி பேசினாா். இதில் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மே 12-ஆம் தேதி சுதேசி ஆலை அருகில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தீா்மானங்கள்:

தொழிலாளா் விரோத சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். ஒரு சில நிறுவனங்களில் ஊதிய உயா்வுக்காக முத்தரப்பு பேச்சு வாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். இந்திய தொழிலாளா் மாநாடு அவசரமாக கூட்டப்பட வேண்டும்.

மாதத்துக்கு ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை நாள், மிகை நேர வேலைக்கு இரட்டை ஊதியம், பாதுகாப்பு மற்றும் சட்டபூா்வ நலன்கள் வேண்டும்.

சமையல் எரிவாயு மலிவு விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.