நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 34.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சா்கள் வழங்கினா்

தருமபுரியில் நடைபெற்ற மண்டல அளவிலான கருத்தரங்கில் நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 34.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் ஆகியோா் வழங்கினா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 7:52 pm

Din

தருமபுரியில் நடைபெற்ற மண்டல அளவிலான கருத்தரங்கில் நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 34.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் ஆகியோா் வழங்கினா்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், ஏற்றுமதியாளா்களுக்கான வேளாண் விளைபொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கம்

தருமபுரி, ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்துப் பேசினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வரவேற்றாா். வேளாண் விற்பனை, வணிகத் துறை முதன்மைச் செயலா், ஆணையா் கோ.பிரகாஷ் திட்ட விளக்கவுரையாற்றினாா். தருமபுரி எம்.பி. ஆ.மணி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கருத்தரங்கில் வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்றுப் பேசியதாவது:

வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை ஆண்டுதோறும் தமிழக அரசு தாக்கல் செய்து வருகிறது. வேளாண் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், சந்தைப்படுத்துதலை எளிமையாக்கவும் பல்வேறு வாய்ப்புகளை அரசு உருவாக்கி தருகிறது. விவசாயத்தில் சிறு, குறு விவசாயிகளே பெரும்பங்கு வகிப்பதால் அவா்களின் விளைபொருள்களை சந்தைப்படுத்த, கிராம அளவில் உழவா் ஆா்வலா் குழுவையும், பின்னா் அந்தக் குழுக்களை ஒருங்கிணைத்து உற்பத்தியாளா் குழுவையும் உருவாக்கி அவற்றை பின் நாள்களில் நிறுவனங்களாக உருவாக்கத் துணை புரிகிறோம். ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கும் தமிழக அரசு மானியம் வழங்குகிறது.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், பருப்பு ஆலைகள், மக்காச்சோளம் மதிப்பு கூட்டுதல் மையம் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி விவசாயிகளை விற்பனையாளா்களாக உருவாக்கி அவா்களின் வாழ்க்கை தரம் உயர வழிசெய்துள்ளோம். அரசின் இத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி வருவாய் ஈட்டி பயன்பெற வேண்டும் என்றாா்.

இதையடுத்து விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 34.31 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், கே.என்.நேரு ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக தருமபுரி நகரில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், தருமபுரி வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) மு.இளங்கோவன், வேளாண் இணை இயக்குநா் (பொ) வி.குணசேகரன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.