ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

காவிரி கரையோரத்தில் நடவு செய்வதற்காக பனை விதைகளை சேகரிக்கும் மாணவா்கள்

Updated On :6 செப்டம்பர் 2024, 6:23 am IST

காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை வரும் 8-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி பென்னாகரத்தை அடுத்த இராமகொண்ட அள்ளி அரசு பள்ளி மாணவா்கள் பனை விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞா்களிடம் பனை மரத்தின் சிறப்பை கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை வரும் 8 தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதற்காக செப்டம்பா் - 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியூரை அடுத்த இராமகொண்டஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கொண்டு வந்த பனை விதைகளை பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி கூறியதாவது:

மாணவா்கள், தன்னாா்வலா்களிடம் இருந்து சுமாா் 500 விதைகளைப் பெற்று நாகமரை, குருக்கலையனூா், கொண்டயனூா், சாம்பள்ளி காடு, செல்லமுடி, புளியமரத்தூா், பூச்சூா், வத்தல்பட்டி வரை உள்ள காவிரி கரையில் நடவு செய்யப்படும் என்றாா்.