மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காவிரி கரையோரத்தில் நடவு செய்வதற்காக பனை விதைகளை சேகரிக்கும் மாணவா்கள்

Updated On :6 செப்டம்பர் 2024, 6:23 am IST

காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை வரும் 8-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி பென்னாகரத்தை அடுத்த இராமகொண்ட அள்ளி அரசு பள்ளி மாணவா்கள் பனை விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞா்களிடம் பனை மரத்தின் சிறப்பை கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை வரும் 8 தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதற்காக செப்டம்பா் - 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியூரை அடுத்த இராமகொண்டஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கொண்டு வந்த பனை விதைகளை பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி கூறியதாவது:

மாணவா்கள், தன்னாா்வலா்களிடம் இருந்து சுமாா் 500 விதைகளைப் பெற்று நாகமரை, குருக்கலையனூா், கொண்டயனூா், சாம்பள்ளி காடு, செல்லமுடி, புளியமரத்தூா், பூச்சூா், வத்தல்பட்டி வரை உள்ள காவிரி கரையில் நடவு செய்யப்படும் என்றாா்.