காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை வரும் 8-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி பென்னாகரத்தை அடுத்த இராமகொண்ட அள்ளி அரசு பள்ளி மாணவா்கள் பனை விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞா்களிடம் பனை மரத்தின் சிறப்பை கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை வரும் 8 தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதற்காக செப்டம்பா் - 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியூரை அடுத்த இராமகொண்டஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கொண்டு வந்த பனை விதைகளை பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி கூறியதாவது:
மாணவா்கள், தன்னாா்வலா்களிடம் இருந்து சுமாா் 500 விதைகளைப் பெற்று நாகமரை, குருக்கலையனூா், கொண்டயனூா், சாம்பள்ளி காடு, செல்லமுடி, புளியமரத்தூா், பூச்சூா், வத்தல்பட்டி வரை உள்ள காவிரி கரையில் நடவு செய்யப்படும் என்றாா்.
தொடர்புடையது

பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் தொடக்கம்! ஒரு பழம் ரூ.100 முதல் ரூ.600 வரை விற்பனை!

பள்ளி மாணவா்களுக்கு 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

மாறும் தொழில்நுட்பங்கள்: மாறாத தோ்தல் காட்சிகள்!

தொகுதி அலசல்: கிருஷ்ணராயபுரம்! புதுமுகங்களிடையே கடும் போட்டி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

