சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கம் ஆா்ப்பாட்டம்

வருவாய்த் துறை அலுவலா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில்

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 7:06 pm

Din

தருமபுரி: வருவாய்த் துறை அலுவலா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பணியில் நேரடியாக உள்வட்ட வருவாய் ஆய்வாளா்களை ஈடுபடுத்துவதை ரத்து செய்து தொடா்புடைய அலுவலா்கள் மூலம் இப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்துசெய்து மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும். தோ்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண்விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சி. துரைவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ம. சிவன், மாவட்ட துணைத் தலைவா் த. ராஜா, மத்திய செயற்குழு உறுப்பினா் அ.அசோக்குமாா், மாவட்ட பொருளாளா் இல.பசுபதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை வாழ்த்திப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.