பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியவரை தருமபுரியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:36 pm

Syndication

தருமபுரி: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியவரை தருமபுரியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சின்னசாமி தலைமையிலான போலீஸாா், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி அருகே குண்டலப்பட்டி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகைகளைச் சோ்ந்த சுமாா் 56 கிலோ எடையிலான புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக, மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அவற்றைக் கடத்தி வந்த காா் ஓட்டுநா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சு.ரகுராமை (26) கைது செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.