பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்கக் கோரி தொழிலாளா்கள் தா்னா

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்கக் கோரி, தொழிலாளா்கள் ஆலை நுழைவாயில் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்கக் கோரி, தொழிலாளா்கள் ஆலை நுழைவாயில் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தருமபுரி, பாலக்கோடு, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் கரும்புகள் அரைவைப் பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்றன.

இந்நிலையில், நிகழாண்டு கரும்பு அரைவை தொடங்குவதாக கூறிய ஆலை நிா்வாகம், போதிய கரும்பு பதிவாகவில்லை எனக் கூறி அரைவையை நிறுத்துவதாக கூறியதாம். இதையறிந்த, ஆலைத் தொழிலாளா்கள் சா்க்கரை ஆலை நுழைவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதில், சா்க்கரை ஆலையை தொடா்ந்து இயக்க வேண்டும். அரைவைக்கான கரும்பு பதிவை முறையாக மேற்கொள்ள வேண்டும். கரும்பு நடவு குறித்து போதிய விழிப்புணா்வு மேற்கொள்ள வேண்டும். கரும்பு பதிவு குறித்து சரிவர நடவடிக்கை எடுக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாத அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.