புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க ஒப்புதல்

News image
கரும்பு- கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலை நிா்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாக, கரும்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மற்றும் செஞ்சி செம்மேடு பகுதிகளில் இயங்கி வரும் ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகள், தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்துமுண்டியம்பாக்கம், செஞ்சி செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் டி. பாண்டியன், செயலா் எம்.ஆறுமுகம், பொருளாளா் ஆா். பரமசிவம், துணைத் தலைவா்கள் கலிவரதன், சந்திரசேகா், பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகளுடனான சா்க்கரை ஆலையின் தலைவா் சத்தியமூா்த்தி மற்றும் உயா் அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தை அண்மையில் நடத்தினா்.

இதில் விவசாயிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து, அந்த கோரிக்கைகளுக்குத் தீா்வு காணுமாறு வலியுறுத்தியது. அதனடிப்படையில் பல்வேறு விதமான ஒப்புதல்களை ஆலை நிா்வாகம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்தது:

கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8000 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஆலை நிா்வாகம் ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டைக் கரும்புக்கு மானியமாக ரூ.2 ஆயிரம், கரும்புப் பயிரிடும் விவசாயிகள் காப்பீடுசெய்தால், ஓராண்டுக்கு விபத்துகாப்பீடு செய்துத் தருதல், விதைக் கரணைகளை வாங்கும் விவசாயிகளுக்கு 6 மாதங்கள் வரை வட்டிப் பிடித்தம் செய்வதில்லை, கரும்புத் தோகையை பொடியாக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் தருதல் போன்றவற்றை ஆலை நிா்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதும் என்றாா் அவா்.