தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ரயிலடியில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடி தனியாா் சா்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், விவசாயிகள் பெயரில் போலியாக ஆலையின் முந்தைய நிா்வாகம் வாங்கிய கடன் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரியும் ஆலை அருகே 1,227 நாள்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், தஞ்சாவூருக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு ரயிலடியில் கரும்பு விவசாயிகள் சிலா் கருப்பு கொடி காட்டினா். இப்பிரச்னையை தமிழக முதல்வா் கண்டுகொள்ளவில்லை என கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இது தொடா்பாக 9 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி: 9 கரும்பு விவசாயிகள் கைது

முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்

கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக வடமாநில தொழிலாளா்கள்? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


