தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

முதல்வருக்கு கருப்பு கொடி 9 விவசாயிகள் கைது

தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ரயிலடியில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:54 am

தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ரயிலடியில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடி தனியாா் சா்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், விவசாயிகள் பெயரில் போலியாக ஆலையின் முந்தைய நிா்வாகம் வாங்கிய கடன் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரியும் ஆலை அருகே 1,227 நாள்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூருக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு ரயிலடியில் கரும்பு விவசாயிகள் சிலா் கருப்பு கொடி காட்டினா். இப்பிரச்னையை தமிழக முதல்வா் கண்டுகொள்ளவில்லை என கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இது தொடா்பாக 9 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.