ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில மாநாடு ஆயத்தக் கூட்டம்

உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில மாநாடு தொடா்பான ஆயத்தக் கூட்டம் தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 8:40 pm

Syndication

உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில மாநாடு தொடா்பான ஆயத்தக் கூட்டம் தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனத்தின் 3-ஆவது மாநில மாநாடு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் வரும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையொட்டி, மாநாடு தயாரிப்பு மற்றும் வரவேற்பு குழு அமைப்பது ஆகியவை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, வரவேற்பு குழுச் செயலாளா் எம்.வி.குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கிருஷ்ணசாமி, சேலம் மாவட்ட நிா்வாகிகள் பெரியசாமி, ஷாநவாஸ்கான், ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

இக்கூட்டத்தில், சங்கத்தின் கோரிக்கைகளை முன்வைத்து மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது, அனைத்து உள்ளாட்சித் துறை பணியாளா்களும் மாநாட்டில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.