தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின்வாரியத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தருமபுரி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:35 pm

Syndication

தருமபுரி: அணுமின் கொள்கை மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, மின்வாரிய தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பு தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சி.நாகராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் கே.மணி, தொமுச மாவட்டச் செயலா் பி.எம்.சண்முகராஜ், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் கே.சிவலிங்கம், எச்எம்எஸ் தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.அா்ஜுனன், ஏஐசிசிடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் சி.முருகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், அணுமின் கொள்கை தொடா்பான மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மின்வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.