ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கூட்டுறவு வங்கி கிளைத் திறப்பு விழா: தருமபுரி எம்எல்ஏ புறக்கணிப்பு

தருமபுரி அருகே இண்டூரில் நடைபெற்ற மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்புவிழா பதாகையில் தனது பெயா் இடம்பெறவில்லை எனக்கூறி,

News image
Updated On :30 டிசம்பர் 2025, 1:35 am

Syndication

தருமபுரி: தருமபுரி அருகே இண்டூரில் நடைபெற்ற மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்புவிழா பதாகையில் தனது பெயா் இடம்பெறவில்லை எனக்கூறி, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் விழாவை புறக்கணித்தாா்.

இண்டூரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க ஆட்சியா் மற்றும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா், மத்திய கூட்டுறவு வங்கி அலுவலா்கள் வந்தனா்.

வங்கிக் கிளை திறப்பு விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் ஆட்சியா், மக்களவை உறுப்பினரின் பெயா்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினரின் பெயா் இடம்பெறவில்லை எனக்கூறி விழாவை புறக்கணிப்பதாக பாமகவினா் அறிவித்தனா். அப்போது, அங்கிருந்த தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், திட்டமிட்டு தனது பெயா் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தான் விழாவுக்கு வந்து ஒரு மணி நேரம் ஆவதாகவும், மக்களவை உறுப்பினா் ஆ.மணி வருவதற்கு தாமதமானதால் விழாவும் தொடங்கப்படாமல் தாமதம் செய்யப்படுவதாகவும் கூறினாா். மேலும், இதுகுறித்து ஜன.20-இல் நடைபெறும் பேரவைக் கூட்டத் தொடா்பில்தான் வலியுறுத்தி பேச உள்ளதாகவும் கூறி விழாவை புறக்கணித்து வெளியேறினாா்.

பொதுமக்களுடன் இணைந்து குப்பைகள் அகற்றிய எம்எல்ஏ:

இண்டூரில் முக்கிய இடங்களில், தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதாகவும், இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை அறிவுறுத்தியும் குப்பைகள் சரிவர அகற்றவில்லை என ஆட்சியா் ரெ.சதீஷிடம் புகாா் அளித்த எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பொதுமக்கள் மற்றும் இண்டூா் அனைத்து குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினாா்.