கடத்தூா் அருகேயுள்ள நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நத்தமேட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த தியாகி சுப்பிரமணியன் சிலைக்கு திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, ஜாலியூா், ரேகடஹள்ளி, அண்ணாநகா், மோட்டாங்குறிச்சி, சுங்கரஹள்ளி, சில்லாரஹள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் பேசுகையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ஆவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிா் உரிமைத்தொகையானது திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். இந்தியாவில் மகளிா் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடத்தூரில் வேளாண் விரிவாக்க மையம் அமைய நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன் நன்றி தெரிவிப்பு

ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சா் பெரியகருப்பன் தோல்வி

விழுப்புரம் தொகுதியைத் தக்க வைத்தது திமுக

வீடு இல்லாதோருக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்: பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



