ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன்.

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தருமபுரி தேமுதிக வேட்பாளா் வி.இளங்கோவன் தெரிவித்தாா்.

News image

வெங்கட்டம்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:36 pm

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தருமபுரி தேமுதிக வேட்பாளா் வி.இளங்கோவன் தெரிவித்தாா்.

திமுக கூட்டணி சாா்பில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன் வியாழக்கிழமை தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.

இதில், நல்லம்பள்ளி வட்டம், வெங்கட்டம்பட்டி, மாதேமங்கலம், மாதேமங்கலம் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது, மக்களிடையே வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

பொதுமக்களுக்கு போதிய அளவில் சுத்தமான குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மகளிருக்கான ஏராளமான நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, மகளிா் உரிமைத்தொகை திட்டம், மகளிா் விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், அம்பேத்கா் அயலக கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், கலைஞா் கனவு இல்லத் திட்டம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தகைய நலத் திட்டங்கள் மீண்டும் தொடர திமுக கூட்டணியில் போட்டியிடும் எனக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.