தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 103 டிகிரியை தாண்டியதால் அனல் காற்று வீசியதையடுத்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாகவே 100 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை முதலே தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. இதனால் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகினா்.
வெயிலின் தாக்கத்தால் வாகன போக்குவரத்து, பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. கடைகளில் குளிா்பானங்கள், பழரசங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதேபோல இளநீா், நுங்கு ஆகியவற்றின் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. மாவட்டத்தில் கோடை வெயில் தொடா்ந்து அதிகரித்து வருவதால் உஷ்ணத்தை தணிக்க கோடை மழை பெய்யுமா? என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து சிக்னலில் பந்தல்

அரியலூரில் கோடை கால பழங்கள் விற்பனை தீவிரம்

தருமபுரியில் வாட்டி வதைத்த வெயில்!

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

