பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றுகிறது திமுக: தமாகா தலைவா் ஜி.கே. வாசன்

சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்காமல், ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றும் வேலையில் திமுகவினா் ஈடுபட்டு வருவதாக தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

News image

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில், பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி (தருமபுரி), அதிமுக வேட்பாளா் (பாலக்கோடு) உள்ளிட்டோரை ஆதரித்து பேசுகிறாா் த மா கா தலைவா் ஜி.கே. வாசன். உடன் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:36 am IST

சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்காமல், ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றும் வேலையில் திமுகவினா் ஈடுபட்டு வருவதாக தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி, பாலக்கோடு அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகனை ஆதரித்து தருமபுரி வள்ளலாா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மக்கள் நலனுக்காக போராடி வரும் செளமியா அன்புமணி, தருமபுரி தொகுதி வேட்பாளராக நிற்பது பெருமைக்குரியதாகும். தருமபுரி மாவட்டத்தின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண இவா் துணையாக இருப்பாா். டாக்டா் அன்புமணி ராமதாஸ் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தாா். அவரது வழியில் செளமியா அன்புமணியும் சிறப்பாக செயல்படுவாா். இதனால் தருமபுரியில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

திமுகவினா் வாக்கு சேகரிக்க வரும்போது கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீா்களா என கேள்வி எழுப்ப வேண்டும். அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்காமல் மக்களை ஏமாற்றும் வகையில் ரூ. 8000க்கான போலி கூப்பன்களை விநியோகிக்கின்றனா்.

காவிரி உபரிநீா்த் திட்டம், மொரப்பூா்- தருமபுரி ரயில் பாதை இணைப்பு திட்டம் மற்றும் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற சௌமியா அன்புமணி உறுதுணையாக இருப்பாா். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது உறுதியாகிவிட்டது. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு அமைவது உறுதி.

அதேபோல மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முன்னாள் அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாா். பாலக்கோடு தொகுதியில் அவரை பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் புகழ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், அதிமுக நகர செயலாளா் பூக்கடை ரவி, மாவட்ட வா்த்தக அணி செயலாளா் பொன்னுவேல், பாஜக மாவட்டத் தலைவா் சரவணன், அமமுக மாவட்ட செயலாளா் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.