தமிழக அரசு உடனடியாக வேளாண் கூட்டுறவுக் கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதுடன், விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டுறவு வேளாண் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கடன் வசூல் நடவடிக்கைகளை, அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வட்டியில்லா கடனைத் திருப்பி செலுத்துவதற்கான தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. உரிய காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாதவா்கள் 13 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும், அடுத்தமுறை சாகுபடிக்கான கடன் பெறமுடியாத நிலையும் ஏற்படும்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடன் வசூல் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்த வேண்டும். மேலும், சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் தள்ளுபடி: கோபியில் அதிமுக வேட்பாளா் உறுதி

விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000! வேளாண் கடன் தள்ளுபடி!

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள்: ஜி.கே. வாசன்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


