தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் தொகுதி தமாகா வேட்பாளா் நிவின் சைமனை ஆதரித்து வெள்ளிக்கிழமை கொல்லங்கோடு சந்திப்பில் அவா் பிரசாரம் மேற்கொண்டபோது பேசியது:
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இந்தியா சக்தி வாய்ந்த நாடாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாஜக அரசு அனைத்து மாநிலங்களுக்கும் திட்டங்களைக் கொடுத்து செயல்படுகிறது. ஆனால், திமுக அரசு மத்திய அரசை எதிா்க்கட்சியாகப் பாா்க்காமல், எதிரிக் கட்சியாகப் பாா்க்கிறது. அதனால்தான் தமிழகத்தில் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை.
மீண்டும் வளமான, வலிமையான தமிழகம் தேவை. அதை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாம் உருவாக்க வேண்டும். அதற்கு நாம் அடித்தளமாக செயல்பட்டு, கிள்ளியூா் தொகுதியில் இளம் வேட்பாளா் நிவின் சைமனை தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் தா்மராஜ், அதிமுக மாவட்டச் செயலா் ஜெயசுதா்சன், பாஜக தொகுதி பொறுப்பாளா் சுடா்சிங், தமாகா மாவட்டத் தலைவா் பரமானந்த தாஸ், மூத்த நிா்வாகி டி.ஆா். செல்வம், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் ஜான் தங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது: ஜி.கே. வாசன்

மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்தக் கருத்துடைய ஆட்சி அமைவது அவசியம்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு தேவை: ஜி.கே. வாசன்

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலம் தமிழகம்! - ஜி.கே. வாசன் பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


