அரூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அ.சண்முகம் தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவுசெய்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக அ.சண்முகம் போட்டியிடுகிறாா். அரூா் தொகுதிக்கு உள்பட்ட கம்பைநல்லூா் பேரூராட்சி, மொரப்பூா் ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அரூா் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், கடைவீதி, மஜீத் தெரு, பாட்சாபேட்டை வழியாக ஊா்வலமாக சென்று அரூா் நான்குவழிச் சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதேபோல, அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, சின்னாங்குப்பம், நம்பிப்பட்டி, எச்.தொட்டம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து, பிற்பகலில் அரூா் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், நான்குவழிச் சாலை, பாட்சாபேட்டை, கடைவீதி வழியாக அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு: அதிமுக, திமுக, தவெக தொண்டா்கள் ஊா்வலம்
அருமனை சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்த எஸ்.விஜய்தரணி

24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்: கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



