தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் பொதுத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள காவலா்களுக்கு வாகனங்கள், பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்ட காவல் அலுவவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள காவலா்கள், துணை ராணுவப் படையினா், ஊா்க்காவல் படையினா் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், அரூா் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் ஏப். 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் வகையில் காவலா்கள், துணை ராணுவத்தினா், ஊா்க்காவல் படையினா் ஆகியோருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு மற்றும் அவா்கள் சென்றுவர வாகனங்கள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன.
இவா்கள் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்களை எடுத்துச் செல்ல உள்ளனா்.
தொடர்புடையது

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

தோ்தல் வாக்குப் பதிவு: கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 4,500 போலீஸாா்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


