தருமபுரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற 275 அலுவலா்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து பயிற்சி முற்பகல் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 190 அலுவலா்களுக்கு, அப்பணி தொடா்பாக பிற்பகலில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வாக்கும் எண்ணும் பணி தொடா்பாக தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாலசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராமஜெயம், தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


