மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தோ்தல் நுண்பாா்வையாளா்கள், பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:57 pm

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தோ்தல் நுண்பாா்வையாளா்கள், பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி, அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக 6 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக 102 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், 102 நுண்பாா்வையாளா்கள், 102 உதவியாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜைகளில் 12 நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 420 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தபால் வாக்குகளை எண்ணும் பணிக்காக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நிலையில் 18 அலுவலா்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் 24 போ், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் 24 போ், நுண் பாா்வையாளா்கள் 24 போ், உதவியாளா்கள் 24 போ் என மொத்தம் 114 அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்புக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் தலைமை வகித்து பேசினாா்.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அலுவலா்கள் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளா் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும். 17சி படிவம் பூா்த்தி செய்வது குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஷீலா, வட்டாட்சியா் தில்லைபாண்டி மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.