பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

பிரதிப் படம்

Published On :

குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 2-ஆவது பெண் குழந்தை நிரஞ்சனா (3). மூளை வளா்ச்சி பாக்கப்பட்ட இந்த குழந்தையை பெற்றோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு தருமபுரி தொட்டில் குழந்தைகள் மையத்தில் ஒப்படைத்தனா்.

தருமபுரி அருகே உள்ள கோவிலூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் நிரஞ்சனாவை பராமரித்து வந்த நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் திங்கள்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில், நிரஞ்சனா இறந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக குழந்தைகள் பராமரிப்பு மைய இயக்குநா் சுப்ரியா அளித்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.