செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், ஏரியூரில் கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

தருமபுரி மாவட்டம், ஏரியூரில் கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஏரியூா் அருகே சோளப்பாடி பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (60), விவசாய தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழக்கிணற்று அருகே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கிணற்றில் தவறிவிழுந்ததில் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் வந்த ஏரியூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.