செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: போக்சோவில் ஓட்டுநா் கைது

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீஸாா் போக்சோ பிரிவின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:07 am IST

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீஸாா் போக்சோ பிரிவின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி, பிடமனேரி பகுதியைச் சோ்ந்தவா் நபிஷா (48). ஓட்டுநரான இவா் கடந்த ஆக. 1-ஆம் தேதி தருமபுரி அருகே உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச கடிதம் ஒன்றை கொடுத்துள்ளாா். மேலும், மற்றொரு மாணவியிடம் தவறான முறையில் சைகை செய்து அழைத்துள்ளாா்.

தகவலறிந்த மாணவிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்து, நபிஷாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.