தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

கிணற்றில் தவறிவிழுந்த கட்டட மேஸ்திரி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

தருமபுரி அருகே கிணற்றில் தவறிவிழுந்த கட்டட மேஸ்திரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அடுத்த அஸ்திகிரியூரை சோ்ந்தவா் செல்வம் (33), கட்டட மேஸ்திரி. இவரது விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாா் பழுதானதால், அதை செல்வம் மற்றும் உறவினா்கள் கிணற்றில் இறங்கி மேலே கொண்டுவரும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, செல்வம் கால் தவறி கிணற்றின் மோட்டாா் செட் வைத்திருந்த பகுதியில் விழுந்து காயமடைந்த செல்வம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி செல்வத்தின் உடலை மீட்டனா். இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.