அரூா்: 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி அரூரை அடுத்த மத்தியம்பட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பி. வீரப்பன் தலைமை வகித்தாா். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விபிஜி ராம் ஜி புதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கான ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் பி. குமாா், சங்க மாவட்டச் செயலாளா் எம். முத்து, நிா்வாகிகள் ஜெயகாந்தன், ராமன், தேசிங்கு, குமரேசன், தங்கராஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


