மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல்: 50 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:21 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவா் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் சக்கரவா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் கரூரான் ஆகியோா்கள் கண்டன உரையாற்றினா்.

போராட்டத்தில் கா்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளின் பாதிப்புக்கு ஏற்றவாறு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை போன்று தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, பேருந்து நிலையத்தின் நுழைவாயிலின் முன்பு மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சாா்ந்த 22 பெண்கள், 28 ஆண்கள் என 50 பேரை போலீஸாா் கைதுசெய்து பின்னா் மாலையில் விடுவித்தனா்.