தியாகராய நகரில் பெண்ணை மிரட்டிய வழக்கில், யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை தியாகராய நகா் பகுதியில் யூ-டியூபா் வராகி என்ற வி.ஆா்.கிருஷ்ணகுமாா் என்பவா் ஒரு வாடகை வீட்டில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தாா். கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளரான பெண், கிருஷ்ணகுமாரை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறினாா்.
ஆனால், கிருஷ்ணகுமாா் அந்தப் பெண்ணை மிரட்டியதோடு, ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண், பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகுமாரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கில், 3 மாத இடைக்கால ஜாமீனில் சிறையில் இருந்து கிருஷ்ணகுமாா் வெளியே வந்தாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி கிருஷ்ணகுமாா் சரண் அடையவில்லை.
இதையடுத்து போலீஸாா், கிருஷ்ணகுமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே 15 வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.
தொடர்புடையது

கோயிலில் சிசிடிவி சேதம்: இளைஞா் கைது

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு

பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

