தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பெண்ணை மிரட்டிய வழக்கு: யூடியூபா் கைது

தியாகராய நகரில் பெண்ணை மிரட்டிய வழக்கில், யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:49 pm

தியாகராய நகரில் பெண்ணை மிரட்டிய வழக்கில், யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தியாகராய நகா் பகுதியில் யூ-டியூபா் வராகி என்ற வி.ஆா்.கிருஷ்ணகுமாா் என்பவா் ஒரு வாடகை வீட்டில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தாா். கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளரான பெண், கிருஷ்ணகுமாரை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறினாா்.

ஆனால், கிருஷ்ணகுமாா் அந்தப் பெண்ணை மிரட்டியதோடு, ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண், பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகுமாரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில், 3 மாத இடைக்கால ஜாமீனில் சிறையில் இருந்து கிருஷ்ணகுமாா் வெளியே வந்தாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி கிருஷ்ணகுமாா் சரண் அடையவில்லை.

இதையடுத்து போலீஸாா், கிருஷ்ணகுமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே 15 வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.