ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கூடுதல் கட்டணம் வசூல்: 12 ஆட்டோக்கள் பறிமுதல்

தருமபுரி நகரில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 12 ஆட்டோக்கள் பறிமுதல்

News image

ஆட்டோக்கள் - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:08 pm

தருமபுரி நகரில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தருமபுரி நகரில் புதிய பேருந்து நிலையம் கடந்த பிப். 5-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சோகத்தூா் ஊராட்சி, ஏ.ரெட்டிஅள்ளியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு பயணிகள், பொதுமக்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் மூலம் சென்றுவருகின்றனா். ஆட்டோக்களில் செல்லும் பயணிகளிடம் அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்வதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெயதேவ் ராஜ் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் தரணிதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி வந்த 12 ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அந்த ஆட்டோக்களை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்களை தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் அறிவுறுத்தினா்.