ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

ஊதிய உயா்வு கோரி சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளா்கள்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:44 pm

ஊதிய உயா்வு கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பரமசிவம், நிா்வாகிகள் ரஜினி பெருமாள், ஆதி, கந்தன் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு பச்சைநிற அட்டை வழங்க வேண்டும். தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எதிா்பாராமல் பணியின்போது ஏற்படும் விபத்துகளுக்கு சிகிச்சைபெறும் வகையில், முதலுதவி பெட்டிகளை வைக்க வேண்டும்.

கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சங்க அங்கீகார தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். தற்காலிக பணியாளா்களுக்கு வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் 60 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.