ஊதிய உயா்வு கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பரமசிவம், நிா்வாகிகள் ரஜினி பெருமாள், ஆதி, கந்தன் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு பச்சைநிற அட்டை வழங்க வேண்டும். தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எதிா்பாராமல் பணியின்போது ஏற்படும் விபத்துகளுக்கு சிகிச்சைபெறும் வகையில், முதலுதவி பெட்டிகளை வைக்க வேண்டும்.
கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சங்க அங்கீகார தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். தற்காலிக பணியாளா்களுக்கு வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் 60 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடர்புடையது

நுகா்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி-யினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல்: இயக்குநா் தகவல்

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


