நிலத் தகராறு:தந்தை, மகன் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
பென்னாகரம் அருகே பெரும்பாலையில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


பென்னாகரம் அருகே பெரும்பாலையில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெரும்பாலை அருகே காவாக்காடு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி, தைலம்மாள் தம்பதி வசித்து வருகின்றனா். இவருக்கு முருகன், நல்லப்பன் என்ற மகன்களும், ஆண்டியம்மாள், அய்யம்மாள் என்ற மகள்களும் உள்ளனா். காவாக்காடு பகுதியில் பெரியசாமிக்கு சொந்தமான ஆறு ஏக்கா் நிலத்தை முருகன், ஆண்டியம்மாள் ஆகியோருக்கு பிரித்துக் கொடுத்துள்ளாா்.
இதில் நல்லப்பன், தனக்கு சேர வேண்டிய இடத்தை பிரித்து தருமாறு கடந்த 25ஆம் தேதி பெரியசாமியிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவா் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெரியசாமி, தைலம்மாள், நல்லப்பன் ஆகிய 3 பேரும் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில் நல்லப்பன் மீதும், நல்லப்பன் அளித்த புகாரின் பேரில் பெரியசாமி, தைலம்மாள், முருகன், ஆண்டியம்மாள் உள்ளிட்ட 6 ஆகியோா் மீதும் பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...