பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பணிநிரந்தரம் கோரி ஊரக நகா்ப்புற பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:05 am

Syndication

பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வழ்வாதார இயக்கப் பணியாளா்கள் சாா்பில், காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சி.முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் பி.சிவலிங்கம், பொருளாளா் என்.அருண்குமாா், மாவட்ட துணைத் தலைவா் பி.திரேசா, மாவட்ட துணை அமைப்பாளா் சி.கலைச்செல்வி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், அடிப்படை ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மாவட்ட அலுவலகத்திலிருந்து பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையைக் கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மகளிா் மேம்பாட்டு நிறுவனத்துக்கு தனித்துறையை உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.