நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

நகை திருட்டு!

Updated On :31 ஜனவரி 2026, 8:08 pm

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் பத்மா (55). இவரது அக்கா ருக்குவுக்கு கடந்த ஜன. 24-ஆம் தேதி வீட்டில் தவறிவிழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வேலூா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற சென்ற ருக்கு உடன் பத்மா சென்றாா். பின்னா் சிகிச்சை முடிந்து இருவரும் 29-ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் பூட்டுகளை திறக்க முயன்றபோது, திறக்க முடியவில்லையாம்.

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கடப்பாரையைக் கொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்தனா். அப்போது, வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டு 4 பவுன் ஆரம், 2 பவுன் சங்கிலி, ஒரு பவுன் தோடு, 3 பவுன் நெக்லஸ், ஒரு பவுன் மோதிரம் உள்பட 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.