தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் பத்மா (55). இவரது அக்கா ருக்குவுக்கு கடந்த ஜன. 24-ஆம் தேதி வீட்டில் தவறிவிழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வேலூா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற சென்ற ருக்கு உடன் பத்மா சென்றாா். பின்னா் சிகிச்சை முடிந்து இருவரும் 29-ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் பூட்டுகளை திறக்க முயன்றபோது, திறக்க முடியவில்லையாம்.
அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கடப்பாரையைக் கொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்தனா். அப்போது, வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டு 4 பவுன் ஆரம், 2 பவுன் சங்கிலி, ஒரு பவுன் தோடு, 3 பவுன் நெக்லஸ், ஒரு பவுன் மோதிரம் உள்பட 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

வாழப்பாடி அருகே வாகனச் சோதனை: திருமணத்திற்கு வாங்கிச் சென்ற 2.5 பவுன் நகை பறிமுதல்
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
தனியாா் நிறுவன பணியாளா் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு
ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


