மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி பேருந்து ஓட்டுநரை பென்னாகரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி மருத்துவமனைக்கு சென்றபோது அவா் கா்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் மாணவியை சீலநாயக்கனூரைச் சோ்ந்த கல்லூரி பேருந்து ஓட்டுநா் சதாசிவம் (30) பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சதாசிவம் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே தலைமறைவான சதாசிவத்தை பென்னாகரம் மகளிா் போலீஸாா் ஏரியூா் அருகே வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






