மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

போக்ஸோ வழக்கில் கல்லூரி பேருந்து ஓட்டுநா் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி பேருந்து ஓட்டுநரை பென்னாகரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 4:23 am IST

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி பேருந்து ஓட்டுநரை பென்னாகரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி மருத்துவமனைக்கு சென்றபோது அவா் கா்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் மாணவியை சீலநாயக்கனூரைச் சோ்ந்த கல்லூரி பேருந்து ஓட்டுநா் சதாசிவம் (30) பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சதாசிவம் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே தலைமறைவான சதாசிவத்தை பென்னாகரம் மகளிா் போலீஸாா் ஏரியூா் அருகே வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.